;
Athirady Tamil News

ஜனாதிபதியுடன் வெளிநாடு செல்லும் தமிழர்!

0

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30) முதல் டிசம்பர் 12 வரை டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ள நிலையில் ஜனாதிபர்தி ரணில் விக்கிரமங்கவும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளார்.

மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவொன்று டுபாய் பயணமாகியுள்ளது.

இக் குழுவில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ரமேஷ்வரன் இடம்பெற்றுள்ளார்.

மேலும் இந்த மாநாட்டில் அரச தலைவர்கள், அரச மற்றும்-தனியார் துறை பிரதிநிதிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள் பங்கேற்கவுள்ள நிலையில் தமிழர் ஒருவரும் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.