;
Athirady Tamil News

தேர்தல் பரப்புரையை ஜனவரி முதல் ஆரம்பிக்கிறது மொட்டு கட்சி!

0

தேசிய மட்டத்திலான தேர்தலை இலக்கு வைத்து ஜனவரி முதல் கிராமிய மட்டத்திலான ‘தேர்தல் பிரச்சார’ நடவடிக்கையை மேற்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சி தீர்மானித்துள்ளது.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் எதிர்வரும் டிசம்பர் 15 ஆம் திகதி கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது கட்சியின் முக்கிய சில பதவிகளில் மாற்றங்கள் வரவுள்ளது மாத்திரமல்லாமல் புதிய நியமனங்களும் இடம்பெறவுள்ளன.

அதிபர் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டு தேர்தல்களும் அடுத்தவருடம் (2024) நடத்தப்படும் என அதிபர் அறிவித்துள்ள நிலையில், ஜனவரி முதல் முழு வீச்சுடன் பிரசாரத்தில் இறங்குவதற்கு மொட்டு கட்சி முடிவெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.