;
Athirady Tamil News

கிரேக்க பிரதமர் – ஜனாதிபதி ரணில் சந்திப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாகிஸ் (Kyriakos Mitsotakis) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது.

ஜனாதிபதி ரணில் டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28 இல் பங்கேற்கச் சென்றிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை பலப்படுத்திக்கொள்வது தொடர்பில் இரு நாட்டு தலைவர்களும் அவதானம் செலுத்தியிருந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் இந்த சந்திப்பின்போது , விரைவில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி கிரேக்க பிரதமருக்கு அழைப்பு விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.