;
Athirady Tamil News

பேருந்து சக்கரங்களுக்குள் சிக்கி ஒருவர் உயிரிழப்பு

0

பொல்கஹவெல பகுதியில் பேருந்தில் இருந்து இறங்க முட்பட்ட ஒருவர் பேருந்தின் சக்கரங்களுக்குள் சிக்கி உயிரிழந்துள்ளார்.

அலவ்வவில் இருந்து குருணாகல் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் பயணித்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

பேருந்து சக்கரங்களுக்குள் சிக்கி பலத்த காயமடைந்தவரை பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை
உயிரிழந்த நபர் பொல்கஹவெல கந்தகொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பேருந்து சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொல்கஹவெல காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.