;
Athirady Tamil News

நெடுந்தீவுக்கு வந்து பாருங்கள்; பந்துலவுக்கு சவால்விடுத்த சிறிதரன் எம்.பி!

0

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இதுவரை அரச பேருந்தோ அல்லது தனியார் பேருந்தோ சேவையில் ஈடுபட முன்வரவில்லை என தெரிவித்த சிறிதரன் எம்.பி, நெடுந்தீவுக்கு வந்து லேண்ட் மாஸ்டரில் பயணியுங்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் பந்துலவுக்கு சவால் விடுத்தார்.

வடக்கு மக்கள் எதிர்கொள்ளும் போக்குவரத்து பிரச்சினைகள் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது, நெடுந்தீவுக்கான பொதுப் போக்குவரத்து வசதிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

போக்குவரத்துக்கு அந்தரிக்கும் பொதுமக்கள்
இதன்போது கேள்வியெழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன், நெடுந்தீவில் இதுவரை அரச பேருந்தோ அல்லது தனியார் பேருந்தோ சேவையில் ஈடுபட முன்வரவில்லை என குறிப்பிட்டார்.

இதன்காரணமாக 14 கிலோமீற்றர் பயணத்தூரத்தை பொது மக்கள் தனியார் வாடகை வாகனங்களின் ஊடாகவே பயணிக்க வேண்டிய நிலை உள்ளதாகவும் அவர் , சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த போக்குவரத்து துறை அமைச்சர் பந்துல குணவர்தன, நெடுந்தீவில் அரச பேருந்து ஒன்று சேவையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டார்.

எனினும் அது 1950 ஆம் ஆண்டு காலத்தில் அங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட்ட மிகப் பழைய பேருந்து என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் எடுத்துரைத்தார்.

அதற்கு பதிபளித்த அமைச்சர் பந்துல , அங்கு சீரமைக்கப்பட வேண்டிய 3 கிலோமீற்றர் பாதை புனரமைப்பு பணிகளையும், பேருந்து சேவைகளையும் அடுத்த வருடத்திற்குள் பூர்த்தி செய்யவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.