;
Athirady Tamil News

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி இல்லாதொழித்தால் முழு நாடும் வீழ்ச்சியடையும் : ரணில் எச்சரிக்கை

0

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பை இல்லாதொழித்தால் முழு நாடும் மீண்டும் வீழ்ச்சியடையும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றயை தினம்(13) இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

“வீழ்ச்சியடைந்துள்ள இலங்கைப் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தைத் தவிர வேறு வழியில்லை.

அதிகாரத்தைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் பல அரசியல்வாதிகள் மக்கள் மத்தியில் உருவாக்கும் கற்பனைக் கதைகள் தொடர்பில் நாட்டு மக்கள் அவதானமாக இருக்க வேண்டும்.

இவ்வாறான கற்பனைக் கதைகளில் சொல்லப்படும் விடயங்களை நிறைவேற்ற முயற்சிப்பதன் மூலம் நாடு மீண்டும் வங்குரோத்து நிலைக்குத் தள்ளப்படும்.” என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.