;
Athirady Tamil News

அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி விபத்து: மூவர் காயம்

0

அதிவேகமாக பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று வீதியில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டகலையிலிருந்து ஹட்டன் நோக்கி பெண்ணொருவர் செலுத்திச் சென்ற முச்சக்கரவண்டி ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் ஹட்டன் குடாகம பகுதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இடம்பெற்ற போது சாரதியும் அவரது இரண்டு பிள்ளைகளும் முச்சக்கரவண்டியில் பயணித்ததாகவும், விபத்தில் மூவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து அருகில் உள்ள கடையின் பாதுகாப்பு கமராவில் பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.