;
Athirady Tamil News

யாழில் கத்தரிக்காய் களவெடுத்தவருக்கு நேர்ந்த கதி

0

யாழ்ப்பாணத்தில் சுமார் 300 கிலோ கிராம் கத்தரிக்காயை திருடிய குற்றச்சாட்டில் நேற்று (17) இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் திருநெல்வேலி பாற்பண்ணை பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞரே கைதாகியுள்ளார்.

யாழ்ப்பாணம் – கோப்பாய் மத்தி பகுதியில் உள்ள கத்தரித் தோட்டம் ஒன்றில் கடந்த 07ஆம் திகதி இரவு பெரும் தொகையான கத்தரிக்காய்கள் திருடப்பட்டுள்ளன.

300 கிலோ கிராம் கத்தரிக்காய்
மறுநாள் தோட்ட உரிமையாளர் தோட்டத்திற்கு சென்ற வேளை, கத்திரிச் செடியில் இருந்த மாயமானதை கண்டு அதிர்ந்துள்ளார். இதனையடுத்து திருட்டு சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

அந்த முறைப்பாட்டின் பிராகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் ,கத்தரிக்காய் திருடியவர் கைதாகியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.