;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் பெய்ந்த கனமழையால் கோயில் ஒன்றுக்கு நேர்ந்த நிலை!

0

இலங்கையில் சமீப நாட்களாக நிலவும் சீரற்ற காலநிலையால் பல்வேறு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் நேற்றைய தினம் (18-12-2023) திருகோணமலையில் உள்ள இலிங்கநகர் பாலமுருகன் ஆலய பின்புற மதில் இடிந்து வீழ்ந்துள்ளது.

இதேவேளை, பாலமுருகன் ஆலயத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ஆலய நிர்வாக சபை தெரிவித்துள்ளது.

மேலும், கனமழை காரணமாக தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இடைத் தங்கல் முகாம்களுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.