;
Athirady Tamil News

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

0

இலங்கைக் கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 14 பேரையும் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

யாழ்ப்பாணம், காரைநகர் கடற்பகுதியில் வைத்து இழுவைப் படகுடன் 14 இந்திய மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்டனர்.

விளக்கமறியல்
கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்று மாலை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தின் பதில் நீதிவான் சரோஜினிதேவி இளங்கோவனின் இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு அவரின் முன்னிலையில் முற்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில், கைதான இந்திய மீனவர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.