;
Athirady Tamil News

சர்வதேச மட்டத்தில் சாதித்த மாணவர்களுக்கு யாழில் கௌரவிப்பு

0

மலேசியாவில் நடைபெற்ற UCMAS சர்வதேச மனக்கணிதப் போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்ற யாழ்ப்பாணம் திருநெல்வேலி UCMAS கிளையில் பயிலும் 19 மாணவர்களுக்கான பாராட்டு நிகழ்வு நேற்று (23) பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

UCMAS இயக்குநர் றாதை பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இயக்குநர் றாதை பாஸ்கரன் தலைமையுரையாற்ற பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை சிறப்புரையாற்றினார்.

நிகழ்வில் மனக்கணிதப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.