;
Athirady Tamil News

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ விவகாரம்: நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு

0

இலங்கையின் சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவை எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதுக்கடை நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் ஜெரோம் பெர்னாண்டோ முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாக்குமூலம்
இலங்கையில் உள்ள ஏனைய மதங்களை அவமதிக்கும் வகையில் கருத்து வௌியிட்ட குற்றச்சாட்டில் போதகர் ஜெரோம் பெர்னாண்டோ கடந்த 1 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

சிறிலங்கா குற்றப்புலனாய்வு பிரிவில் வாக்குமூலம் பதிவு செய்ய சென்றிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டதோடு இன்று வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார்.

நீதிமன்ற உத்தரவு
இந்த நிலையில், ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பான வழக்கு இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.