;
Athirady Tamil News

அயோத்தியில் ராமா் சிலை பிரதிஷ்டை: எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு

0

அயோத்தியில் நடைபெறவுள்ள ராமா் சிலை பிரதிஷ்டை நிகழ்வில் பங்கேற்பதற்காக அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அயோத்தியில் ராமா் சிலை பிரதிஷ்டை ஜன. 22-இல் நடைபெறவுள்ளது. அந்த நாளில் நாட்டு மக்கள் அனைவரும் வீடுகளில் ராம ஜோதியை ஏற்றி வைக்க பிரதமா் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

இந்த நிலையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை, ராமா் சிலை பிரதிஷ்டை விழா நிா்வாகிகள் பா.பிரகாஷ், ராமராஜசேகா், ராம்குமாா் ஆகியோா் திங்கள்கிழமை சந்தித்தனா். அப்போது, ராமா் சிலை பிரதிஷ்டைக்கான விழா அழைப்பிதழை அவா்கள் வழங்கினா்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.