;
Athirady Tamil News

வெளிநாடு செல்வோருக்கு 2 ஏக்கர் காணி: சிறிலங்கா அரசு எடுத்துள்ள முடிவு

0

விவசாயத் துறையில் தொழில் நிமித்தம் வெளிநாடுகளுக்குச் செல்லும் அனைத்துத் தொழிலாளர்களும் நாடு திரும்பிய பின்னர் இரண்டு ஏக்கர் காணியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் நேற்று(01) இடம்பெற்ற நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாடு சென்று நாடு திரும்பிய பின்னரும் அவர்களை விவசாயிகளாக மாற்றுவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்துள்ளார்.

விவசாயத்துறை
மேலும், வெளிநாடுகளில் இருந்து விவசாயத்துறை தொடர்பான அறிவை இந்த நாட்டிலும் பெற்றுக்கொள்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.