;
Athirady Tamil News

கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்

0

கொழும்பு- காங்கேசன்துறை புகையிரத சேவை இன்றுடன் சனி (06.01.2024) தற்காலிகமாக இடைநிறுத்தம் யாழ்ராணி ரயில் அனுராதபுரம் வரைசேவையில் ஈடுபடும்.

கொழும்பு- காங்கேசன்துறை ரயில் சேவை இன்றுடன் சனி (06.01.2024) தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படுவதால் யாழ்ராணி ரயில் அனுராதபுரம் வரை சேவையில் ஈடுபடும்.

இதன் நேர அட்டவணை இணைக்கப்பட்டுள்ளது.

மஹோவில் இருந்து அனுராதபுரம் வரையிலான ரயில் பாதை சீரமைப்பு மற்றும் புதிய சமிக்ஞை விளக்குகளும் பொருத்தும் பணிகள் இடம்பெறவுள்ளது.

இந்த வேலைத்திட்டம் இந்தியா அரசின் 14.90 மில்லியன் டொலர் கடன் உதவியுடன் ircon நிறுவனத்தால் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனால் சுமார் 5 மாதங்களுக்கு கொழும்பு – காங்கேசன்துறை ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.