;
Athirady Tamil News

மீண்டும் அரசியலில் களமிறங்கும் சந்திரிக்கா

0

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, சந்திரிக்கா பண்டாரநாயக்கா அடுத்த வாரம் அரசியல் நடவடிக்கைக்காக நாடு திரும்பலாம் எனவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினால் நாளை (08 ஆம் திகதி) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மறைந்த பண்டாரநாயக்கவின் நினைவேந்தல் நிகழ்விலும் அவர் பங்கேற்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வின் பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிறைவேற்றுச் சபையும் கூடும் என்று அக்கட்சி மேலும் கூறியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.