;
Athirady Tamil News

மலசலகூடத்துக்கு சென்ற நபர் கைது; தொடரும் மேலதிக விசாரணை

0

நாடளாவிய ரீதியில் தற்போது முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களை ஒடுக்கும் யுக்திய பொலிஸ் விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இவ்வாறானதொரு நிலையில்,

பருத்தித்துறை – துடுவ பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பில் மலசலகூடத்துக்குள் ஒளிந்தவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுற்றிவளைப்பின்போது பொலிஸாரிடம் இருந்து தப்புவதற்காக மலசலக்கூடத்துக்குள் ஒளிந்துள்ளார்.

இந்நிலையில், அவரை வெளியே அழைத்து பரிசோதித்தபோது அவர் வசம் ஹெரோயின் இருந்துள்ளது.

இதேவேளை, குறித்த நபருக்கு ஹெரோயின் தொடர்பில் ஆறு வழக்குகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.