;
Athirady Tamil News

கிளிநொச்சி கஞ்சாகாரருக்கு 27,000 ரூபாய் தண்டப்பணம்

0

கிளிநொச்சியில் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு 27,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பகுதியில் ஐந்து மில்லி கிராம் கஞ்சா உடமையில் வைத்திருந்த இரண்டு பேரைக் கைது செய்த கிளிநொச்சி பொலிஸார் , அவர்களுக்கு எதிராக வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

தண்டப்பணம் விதிப்பு
சந்தேக நபர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தனித்தனியாகப் புதன்கிழமை (10) ஆஜர்படுத்தியபோது தலா பத்தாயிரம் ரூபாய் படி இருவருக்கும் இருபதாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று ஆறு மில்லி கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட நபரை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது சந்தேக நபருக்கு ஏழாயிரம் ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.