;
Athirady Tamil News

தமிழர் பகுதியொன்றில் உள்ள பொலிஸ் நிலையத்தில் கோலாகலமாக நடைபெற்ற தைப்பொங்கல்!

0

வவுனியா பகுதிகளில் உள்ள ஆலயங்கள், வீடுகள், வர்த்தக நிலையம் மற்றும் தொழிலகங்களிலும் பொங்கல் பொங்கி படைத்து வழிபாடுகள் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, வவுனியா பொலிஸ் நிலையத்திலும் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் இன்று (15.01.2024) காலை 09.00 மணியளவில் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த பொங்கல் நிகழ்வில் பொலிஸ் உயர் அதிகாரிகள, பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் வவுனியா நகர் பிரதேசங்களை சேர்ந்த சமுதாய பொலிஸ் பிரிவின் உறுப்பினர்கள், வர்த்தகர்கள், கிராம சேவையாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.