;
Athirady Tamil News

இந்திய தலைநகரை உலுக்கிய நிலநடுக்கம்: பெரும் பீதியில் மக்கள்

0

இந்திய தலைநகர் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று(22) இரவு 7.2 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

அதன்போது, நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளிலுள்ள மக்கள் பெரும் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில காலமாக இந்திய தலைநகரில் அடிக்கடி நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது.

நிலநடுக்கம்
குறித்த நில நடுக்கமானது, உயரமான கட்டிடங்களில் இருந்தவர்களால் அதிகம் உணரப்பட்டதாகவும் இது இரவு நேரத்தில் ஏற்பட்டதால் மக்கள் பெரும் பீதியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், சீனா மற்றும் கிர்கிஸ்தான் எல்லைப் பகுதியலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.