;
Athirady Tamil News

கிளிநொச்சி குடும்பஸ்தரை பலிவாங்கிய புகையிரதம்; அதிர்ச்சியில் குடும்பத்தினர்

0

கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தரை புகையிரதம் மோதியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார்.

5 பிள்ளைகளின் தந்தை பலி
சம்பவத்தில் கிளிநொச்சி – விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வயதான 5 பிள்ளைகளின் தந்தையான சிவராசமுத்தையா சசிவதனன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

புகையிரதம் மோதி குடும்பஸ்தர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.