;
Athirady Tamil News

கோவை தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை..! வெளியான முக்கிய தகவல்

0

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ்நாடு பாஜகவின் தற்போதைய முக்கியத்துவத்திற்கு அக்கட்சியின் தலைவர் அண்ணாமலை முக்கிய காரணம் என்றே கூறலாம்.

திமுகவை அழுத்தமாக எதிர்த்து வரும் அண்ணாமலையின் கருத்துக்களை பலர் ஏற்றுக்கொண்டு அவரை குறித்து புகழ்ந்து பேச துவங்கி விட்டனர். இது தமிழ்நாடு பாஜகவின் மிக முக்கிய வளர்ச்சி என்றே கூறலாம்.

அப்படி வளர்ந்து வரும் இளம் அரசியல் வாதியான அண்ணாமலை, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த போது பேசிய மத்திய இணையமைச்சர் எல்.முருகன், பாஜக தலைவர் அண்ணாமலை விரும்பி கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்டால் நல்லதுதான் என கூறினார்.

ஆனால் எந்தெந்த கட்சிகள் கூட்டணிக்கு வருவார்கள் என்பதும் வேட்பாளர்கள், போட்டியிடும் தொகுதிகள் குறித்து தேசிய தலைமையும் நாடாளுமன்ற குழுவும் அறிவிக்கும் என்றும் தெரிவித்தார் எல்.முருகன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.