;
Athirady Tamil News

பம்பலப்பிட்டியில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து

0

கொழும்பு – பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் இரண்டு பேருந்துகள் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்து இன்று (11) இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த பேருந்தும், கொழும்பில் இருந்து கல்கிஸ்ஸ நோக்கி பயணித்த பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது..

காவல்துறையினரின் விசாரணை
குறித்த வீதிக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றை திடீரென வீதிக்குச் செலுத்தியதன் காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

குறித்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பம்பலப்பிட்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.