;
Athirady Tamil News

வடக்கு காசாவில் கடும் மோதல்: இஸ்ரேல் இராணுவத்திற்கு இழப்பு

0

ஹமாஸ் படைகளை அழிப்பதற்காக இராணுவம் தனது முக்கிய நடவடிக்கைகளை பெருமளவில் முடித்துவிட்டதாக முன்னர் கூறியிருந்த வடக்கு காசாவில் மீண்டும் கடுமையான சண்டை வெடித்ததால் ஒரு சிப்பாய் கொல்லப்பட்டதாகவும் மேலும் இருவர் படுகாயமடைந்ததாகவும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் புதன்கிழமை தெரிவித்தன.

ஸ்டாஃப் சார்ஜென்ட். அவ்ரஹாம் வோவகன், (21,) என்ற இராணுவ வீரரரே உயிரிழந்தவராவார்.அவரது மரணத்துடன் ஹமாஸுக்கு எதிரான தரைப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட இஸ்ரேலிய துருப்புக்களின் எண்ணிக்கை 237 ஆக உயர்ந்துள்ளது.

புதிய பெரிய அளவிலான சோதனையை
காசா நகரின் Zeitoun சுற்றுப்புறத்தில் ஒரு புதிய பெரிய அளவிலான சோதனையைத் தொடங்கியதை இஸ்ரேல் படைத்தரப்பு புதன்கிழமை உறுதிப்படுத்தியது.

இதுவரை நடந்த நடவடிக்கையின் போது, டசின் கணக்கான ஹமாஸ் செயற்பாட்டாளர்கள் மோதல்களிலும் வான்வழித் தாக்குதல்களிலும் கொல்லப்பட்டுள்ளனர் என இஸ்ரேல் படைத்தரப்பு தெரிவித்துள்ளது.

வீடுகளில் ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளதாக
மேலும், அப்பகுதியில் உள்ள வீடுகளில் ஆயுதங்களை கண்டுபிடித்துள்ளதாகவும் இராணுவம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவின் பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக கடும் சண்டை மற்றும் வான்வழித் தாக்குதல்கள் நடைபெற்றதாக பாலஸ்தீன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.