;
Athirady Tamil News

திருமணம் ஆனதால் இராணுவ செவிலியர் பணிநீக்கம்! 26 ஆண்டுகளுக்கு பின்..60 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

0

இந்திய இராணுவத்தில் பணியாற்றி வந்த செவிலியர் பணிநீக்கம் செய்யப்பட்டதால், அவருக்கு 60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இராணுவ செவிலியர்
1985ஆம் ஆண்டில் இராணுவ செவிலியர் சேவையில் லெப்டினன்ட் பதவியில் பணியாற்றியவர் செலீனா ஜான்.

அதனைத் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் கழித்து இராணுவ அதிகாரி ஒருவரை மணந்தார். திருமணம் செய்த காரணத்தினால் 1988ஆம் ஆண்டு செலீனா ஜான் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பில் வழக்கு தொடுக்க அவர் எண்ணியபோது, தன் வழக்கை வாதாடக் கூட அவருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதன் பின்னர் 2012ஆம் ஆண்டு ஆயுதப்படை தீர்ப்பாயத்தை அணுகிய செலீனா ஜான், தனது பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய கோரிக்கை விடுத்தார்.

ரூ.60 லட்சம் இழப்பீடு
லக்னோவில் உள்ள ஆயுதப்படை தீர்ப்பாயம் 2016ஆம் ஆண்டில் அவருக்கு பணி வழங்குமாறு அரசினை கேட்டுக் கொண்டது. ஆனால் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த நிலையில் செலீனா ஜான் தொடுத்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், பாலினப் பாகுபாட்டின் கரடுமுரடான வழக்கு என்று குறிப்பிட்ட நீதிமன்றம், செலீனா ஜானுக்கு ரூ.60 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும், திருமணத்தை காரணம் காட்டி ராணுவ செவிலியர் சேவையில் இருந்து பணிநீக்கம் செய்ய அனுமதிக்கும் விதி 1995யில் திரும்பப் பெறப்பட்டது என்றும் குறிப்பிட்டது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.