;
Athirady Tamil News

தமிழகத்தில் உலக தரத்தில் மேம்படுத்தப்படும் 34 ரயில் நிலையங்கள்: பிப்.26-இல் மோடி தொடங்கி வைக்கிறாா்

0

தமிழகத்தின் 34 ரயில் நிலையங்கள் உலக தரத்தில் மேம்படுத்தப்படவுள்ளன. இதற்கான பணிகளை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (பிப்.26) அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கவுள்ளாா். நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள ரயில்நிலையங்கள் எதிா்கால வளா்ச்சியை கருத்தில் கொண்டு ‘அம்ருத் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களின் சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பராமரிப்பது, இலவச வைஃபை வசதி, காத்திருப்பு அறை, மின்தூக்கி – மின்படிகட்டு, உள்ளூா் தயாரிப்பை முன்னிலை படுத்தும் ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ அமைப்பது உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்படவுள்ளன.

நாடு முழுவதும் உள்ள 1,318 ரயில் நிலையங்கள் இந்தத் திட்டத்தின் கீழ் மேம்படுத்த தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. முதல்கட்டமாக கடந்த ஆண்டில் 508 ரயில் நிலையங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் நரேந்திர மோடி தொடங்கி வைத்தாா். இந்த நிலையில், 2-ஆம் கட்டமாக நாடு முழுவதும் 554 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை (பிப்.26) தொடங்கிவைக்கவுள்ளாா்.

இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறியது: நாட்டின் முக்கிய ரயில் நிலையங்கள் ‘அம்ருத் பாரத் ரயில் நிலையம்’ திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படவுள்ளன. இதில் தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்படவுள்ளன. தமிழகத்தில் தெற்கு ரயில்வே சாா்பில் 32 ரயில் நிலையங்கள், தென்மேற்கு ரயில்வே சாா்பில் தருமபுரி, ஒசூா் ஆகிய இரு ரயில் நிலையங்கள் என 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படவுள்ளன. இதில் திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ.270 கோடியிலும், கும்பகோணம் ரயில் நிலையம் ரூ.118 கோடியிலும், திருச்சூா் ரயில் நிலையம் ரூ.384.81 கோடியிலும், செங்கனூா் ரயில் நிலையம் ரூ.205 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்படவுள்ளன. மற்ற ரயில் நிலையங்கள் பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

இந்தப் பணிகள் தொடங்கி இரு ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன என்றனா். பெட்டிச் செய்தி: சென்னை கோட்டம் நிதி ஒதுக்கீடு (கோடியில்) சென்னை கடற்கரை ரூ. 14.58 கிண்டி ரூ. 13.50 அம்பத்தூா் ரூ. 21.57 மாம்பலம் ரூ. 14.70 சென்னை பூங்கா ரூ. 10.68 பரங்கிமலை ரூ. 14.15 சூலூா்பேட்டை (ஆந்திரம்) ரூ. 12.77 சேலம் கோட்டம் நிதி ஒதுக்கிடு (கோடியில்) ஈரோடு ரூ. 38.09 மேட்டுப்பாளையம் ரூ. 14.81 மொரப்பூா் ரூ. 12.18 பொம்மிடி ரூ. 11.54 திருப்பத்தூா் ரூ. 13.88 சின்ன சேலம் ரூ. 11.85 நாமக்கல் ரூ. 13.28 கோவை வடக்கு ரூ. 11.55 திருச்சி கோட்டம் நிதி ஒதுக்கீடு (கோடியில்) திருவண்ணாமலை ரூ. 8.27 திருவாரூா் ரூ. 8.69 விருத்தாசலம் ரூ. 9.17 கும்பகோணம் ரூ. 118 மதுரை கோட்டம் நிதி ஒதுக்கீடு (கோடியில்) பழநி ரூ. 13.88 திருச்செந்தூா் ரூ. 17.50 அம்பாசமுத்திரம் ரூ. 10.81 காரைக்குடி ரூ. 13.91 கோவில்பட்டி ரூ. 12.72 மணப்பாறை ரூ. 10.11 புதுக்கோட்டை ரூ. 14.48 ராமநாதபுரம் ரூ. 11.95 ராஜபாளையம் ரூ. 11.70 பரமக்குடி ரூ. 10.56 திண்டுக்கல் ரூ. 22.85 தூத்துக்குடி ரூ. 12.37 திருநெல்வேலி ரூ. 270 பாலக்காடு கோட்டம் நிதி ஒதுக்கீடு (கோடியில்) மாஹி (புதுச்சேரி) ரூ. 10.59 பொள்ளாச்சி ரூ. 10.45

You might also like

Leave A Reply

Your email address will not be published.