;
Athirady Tamil News

யாழில் முன்பகையால் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைப்பு

0

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள நகை கடைக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

தீ மூட்டியவர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை செலுத்தி செல்வது அருகில் உள்ள சிசிரிவி கேமராவில் பதிவாகி உள்ளது. முன்பகை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் சம்பவத்தில் தொடர்புடையவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.