;
Athirady Tamil News

50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் வழங்கி வைப்பு

0

யாழ்ப்பாணம் வலி கிழக்கு விவசாயிகளுக்கு 50 வீத மானிய அடிப்படையில் விவசாய உபகரணங்கள் கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமைகளினால் பாதிக்கப்பட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் தனி நபர் அடங்கலாக 17 பேருக்கு விவசாய உபகரணங்கள் அவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன

கோப்பாய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில்,
இரண்டு சக்கர உழவு இயந்திர பொருத்தி நிலம் பண்படுத்தும் (கலப்பை) இயந்திரம், மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் உட்பட்ட விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில், யாழ்.மாவட்ட செயலர் அ.சிவபாலசுந்தரன் , மாவட்ட வர்த்தக கைத்தொழில் விவசாய சம்மேளனத்தின் தலைவர் , விவசாயத்திணைக்கள உதவிப்பணிப்பாளர், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.