சட்ட மாநாடு
![](https://www.athirady.com/wp-content/uploads/2024/03/Screenshot-2024-03-02-154140-750x430.jpg)
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் 3 ஆவது சட்ட மாநாடு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தொடர்ச்சியான நிபுணத்துவ மேம்பாட்டுக் குழுவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட மாநாடு ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை ஆரம்பமானது. குறித்த மாநாடு நாளைய தினம் ஞாயிற்றுக்கிழமையும் இடம்பெறவுள்ளது.
இந்த சட்ட மாநாட்டில் பிரதம விருந்தினராக உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ்.துரைராஜாவும் சிறப்பு விருந்தினராக உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.