;
Athirady Tamil News

வெற்றிலைக்கேணியில் கடற்றொழிலாளர்கள் இடையே முறுகல்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

வடமராட்சி கிழக்கு-வெற்றிலைக்கேணியில் கடற்றொழிலாளர்கள் இடையே முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது, நேற்றையதினம் (03.03.2024) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது.

வெற்றிலைக்கேணி கடற்றொழிலாளர்களின் கோரிக்கைக்கு அமைய அந்த கடல் பகுதியில் உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதற்கு கரைவலை தொழில் சங்கத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருடன் முறுகல்
எனினும், தொடர்ச்சியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்துவருவதால் நேற்று காலை கரைவலை வாடி கடற்றொழிலாளர்களினால் அந்த பகுதி முற்றுகையிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, சம்பவ இடத்தில் அதிகளவான கடற்றொழிலாளர்கள் ஒன்று கூடியதால் சிறிது நேரம் பதற்றம் நிலவியதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருதங்கேணி பொலிஸாருடனும் கடற்றொழிலாளர்கள் முறுகலில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், உடனடியாக உழவு இயந்திரம் பாவித்து கரைவலை தொழில் செய்வதை நிறுத்தாவிடின், எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப்போவதாகவும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.