;
Athirady Tamil News

இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் எது தெரியுமா..!

0

பூமியின் சுற்றளவு, வானத்துக்கும் பூமிக்குமான தொலைவு, கடல் மட்டம், உயர்ந்த மலைமுகடுகள் என புவிச்சார்ந்த பல ஆராய்சிகள் நடத்தப்படுகின்றன. இவை அனைத்தும் நம் அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமானவை.

இதன்படி இந்தியாவில் முதலில் சூரியன் உதிக்கும் மாநிலம் அருணாச்சல பிரதேசம். அன்ஜாவ் மாவட்டத்தில் உள்ள டோங் என்ற கிராமத்தில் தான் முதலில் சூரியன் உதயமாகிறது.

இந்தியாவின் ஜப்பான்
இந்த ஊர் இந்தியாவின் ஜப்பான் என்று அழைக்கப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,200 மீட்டர் உயரத்தில் அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சோவில் ஆறு மற்றும் மலைகளால் சூழப்பட்ட கிராமம் டோங் ஆகும்.

சுற்றுலா பயணிகளிடையே பிரபலம்
சீனாவிற்கும், மியான்மருக்கும் இடையில் இது அமைந்துள்ளது. பிரம்மபுத்திராவின் துணை நதியான லோஹித்தின் சங்கமம் இதற்கு மேலும் சிறப்பை கூட்டும் விதமாக அமைந்துள்ளது.

இந்த டோங் கிராமத்தில் நாட்டின் எந்த பகுதிகளையும் விட ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் உதித்துவிடும். அதேபோல ஒரு மணி நேரம் முன்னதாகவே சூரியன் அஸ்தமனம் ஆகிவிடும். இதற்காகவே இப்பகுதி சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.