;
Athirady Tamil News

0

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எழுதிய “என்னை அதிபர் பதவியில் இருந்து வெளியேற்ற சதி” என்ற புத்தகத்தின் முதல் கையிருப்பு நேற்று (7) முற்றாக விற்று முடிந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றையதினம்(07) குறித்த புத்தகம் வெளியிடப்பட்ட நிலையில் அன்றைய தினமே முதற்தொகுதி புத்தகங்களும் விற்று தீர்ந்ததாக விஜித யாப்பா பதிப்பகத்தின் தலைவர் விஜித யாப்பா தெரிவித்தார்.

பல்வேறு தரப்பு மக்களும்
சமூகத்தின் பல்வேறு தரப்பு மக்களும் தமது புத்தகக் கடைகளில் இருந்து புத்தகத்தை வாங்கியதாகவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் எம்.பி.க்கள் மற்றும் அரசியல்வாதிகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நூலின் பிரதான விநியோகஸ்தர் தமது நிறுவனம் எனத் தெரிவித்த விஜித யாப்பா, மேலும் ஒரு தொகுதி அச்சிடப்பட்ட புத்தகங்களை விநியோகிப்பதற்காக இன்று (8) கொண்டுவரவுள்ளதாக தெரிவித்தார்.

பல முற்பதிவு கிடைத்துள்ளதாக
இந்நூலை வாங்குவதற்கு நாடளாவிய ரீதியில் உள்ள புத்தகக் கடைகளில் இருந்து பல முற்பதிவு கிடைத்துள்ளதாக அவர் கூறினார். “புத்தகத்திற்கு அதிக கிராக்கி உள்ளது. எதிர்பார்த்ததை விட வேகமாக விற்பனையாகிறது” என்றும் தெரிவித்திருந்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.