;
Athirady Tamil News

யாழ் மாவட்ட செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்படலாம்..!

0

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளராக திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போதைய யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் ஓய்வு பெற்றுச்செல்லவுள்ள நிலையிலேயே, குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

சுகுணவதி தெய்வேந்திரம், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் மேலதிகச் செயலாளராக முன்னர் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

வடமாகாண சபைக்கு மாற்றம்
அதன் பின்னர் பொதுநிர்வாக உள்நாட்டவர்கள் அமைச்சில் சிரேஷ்ட நிலை அதிகாரியாக கடமையாற்றிய நிலையில் தற்போது வடமாகாண சபைக்கு மாற்றம் பெற்று வந்துள்ளார்.

அதேவேளை வடமாகாண மனிதவள முகாமைத்துவ பயிற்சி நெறியின் பிரதி பிரதம செயலாளராக கடமையாற்றிய உமாமகேஸ்வரன் கல்வி நிர்வாக பண்பாட்டு அலுவல்கள் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளராக மாற்றப்பட்ட நிலையில் அவரின் வெற்றிடத்திற்கு சுகுணரதி தெய்வேந்திரம் நியமிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

வட மாகாண பிரதம செயலாளராக
வட மாகாண பிரதம செயலாளராக இளங்கோவன் விரைவில் நியமனம் வடக்கு மாகாண பிரதம செயலாளராக தற்போதைய ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன் விரைவில் நியமிக்கப்படவுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் ஆளுநரின் செயலாளர், கல்வி அமைச்சின் செயலாளர் பதவிகளில் பணியாற்றிய நிலையிலும், நீண்ட காலம் தொடர்ச்சியாக வடக்கில் பணியாற்றியவர் என்பதன் அடிப்படையில் கொழும்புக்கு மாற்றப்பட்டிருந்தார்.

சமன் பந்துலசேனா எனினும், கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளராகப் பணியாற்றும் எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதம செயலாளராக நியமிக்கப்படவுள்ளார்.

இந்நிலையில், தற்போதைய வடக்கு மாகாண பிரதம செயலாளராகவுள்ள சமன் பந்துலசேனா கொழும்புக்கு மாற்றப்படவுள்ளார்.

மாவட்ட செயலாளராக திருமதி சுகுணவதி தெய்வேந்திரம் அவர்களும் பிரதம செயலாளராக இளங்கோவன் வர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது ஆனால் முழுமையாக உறுதிப்படுத்த முடியவில்லை?

You might also like

Leave A Reply

Your email address will not be published.