;
Athirady Tamil News

ரணில் மற்றும் சஜித்தை இணைக்க இரு தூதரகங்கள் முனைப்பு

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருடன் இணைப்பதில், இரண்டு பிரதான தூதரகங்கள் செயல்பட்டு வருவுதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்திட்டம் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றியடைந்துள்ளதாகவும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து முன்னோக்கி செல்லுமாறு, கட்சித் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில் தனிப்பட்ட முறையில் அரசியல் ரீதியான தீர்மானம் எடுக்க நேரிடும் என அக்கட்சியின் பல முக்கியஸ்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கிராமிய மட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் சாதகமான கருத்துக்கள் வெளிவருவதால் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உள்ளூர் தலைவர்கள் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.