;
Athirady Tamil News

பாடசாலை மாணவர்கள் குறித்து கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்

0

நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டு இலவச பாடசாலை சீருடை வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் சீன மக்கள் குடியரசின் மானியமாக 80% சீருடைகள் இலங்கைக்கு வழங்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மாணவர்களுக்கு இலவச சீருடைகள்
பாடசாலை சீருடைக்கான எஞ்சிய 20% மானியம் வழங்கும் சீன விநியோகஸ்தர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் அரச மற்றும் அரச உதவி பெறும் பாடசாலைகளின் மாணவர்களுக்கும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட பிரிவேனாக்களில் உள்ள மாணவ துறவிகள், கன்னியாஸ்திரிகள் மற்றும் சாதாரண மாணவர்களுக்கும் இலவச சீருடைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் மாணவர்கள் படிக்கும் தரங்களுக்கு ஏற்ப 35 வகையான துணி பெட்டிகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.