;
Athirady Tamil News

குடியுரிமை திருத்தச் சட்டம்: விஜய் வெளியிட்ட முதல் அறிக்கை!

0

குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) திங்கள்கிழமை அமல்படுத்தப்பட்ட நிலையில், அந்தச் சட்ட விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டது.

இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

“சமூக நல்லிணக்கத்துடன் நாட்டு மக்கள் அனைவரும் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்திச் செயல்படுத்தப்படும் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 (CAA) போன்ற எந்தச் சட்டமும் ஏற்கத்தக்க்கது அல்ல.

தமிழ்நாட்டில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என்று ஆட்சியாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்.” என்று தெரிவித்தார்.

இந்த நிலையில், விஜய் வெளியிட்ட அறிக்கையில், குடியுரிமை திருத்தச் சட்டம் அமலானது குறித்து மத்திய அரசை விமர்சிக்காமல் தவிர்த்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.