;
Athirady Tamil News

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும்: மனித உரிமை ஆணையகத்தை முற்றுகையிட்ட உறவுகள்

0

வெடுக்குநாறி ஆலயத்தில் வைத்து கைதான ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரில் 5 பேர் தொடர்ந்தும் உணவுதவிர்ப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், மனித உரிமை கண்காணிப்பகம் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுகள் வவுனியா – மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமக்கான நீதியை வலியுறுத்தி ஆலய பூசகர் உள்ளிட்ட 5 பேர் இன்றும் 5வது நாளாக உணவுதவிர்ப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக அவர்களது உடல்நிலை குறித்து இதுவரையில் எந்தவித செயற்பாடுகளையும் மனிதஉரிமை ஆணையகம் மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.