;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் உயிர் பயத்தில் அரச மற்றும் தனியார் பேருந்துக்களில் பயணிக்கும் பயணிகள்!

0

நாட்டில் சமீப காலமாக அரச மற்றும் தனியார் பேருந்துகளின் விபத்துக்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இவ்வாறான விபத்துக்களில் உயிரிழப்புக்களும் ஏற்படுகின்றன.

இவ்வாறான நிலையில் திருகோணமலை – யாழ்ப்பாணம் இடையே சேவையில் ஈடுபடும் அரச பேருந்தும், வவுனியா – யாழ்ப்பாணம் இடையே போக்குவரத்து செய்யும் தனியார் பேருந்தும் ஒன்றுடன் ஒன்று செருகியவாறு பயணத்தை மேற்கொண்டுள்ளன.

இச்சம்பவம் இன்றைய தினம் (15-03-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தின் போது, பயணிகள் மிகவும் அச்சத்தில் இருந்ததை அவதானிக்க முடிந்துள்ளது.

நாட்டில் இவ்வாறான செயலினால் எத்தனையோ விபத்துக்கள் இடம்பெற்ற போதும், சாரதிகளும், பொறுப்பான அதிகாரிகளும் அசமந்தமாக செயற்பட்டு பயணிகளின் உயிர்களுடன் விளையாடுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.