;
Athirady Tamil News

உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்ட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள்! தேசபந்து அதிரடி

0

சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர்கள் உட்பட 18 சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்த இடமாற்றங்கள் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் தீர்மானத்திற்கு அமைய காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் பணிப்புரையின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.

இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகளில் எட்டு சிரேஷ்ட பிரதிப் காவல்துறை மா அதிபர்கள், ஒரு பிரதி காவல்துறை மா அதிபர், எட்டு மூத்த காவல்துறை அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு காவல்துறை அத்தியட்சகர் ஆகியோர் அடங்கியுள்ளனர்.

காவல்துறை
இந்நிலையில் கல்கிசை காவல்துறை பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய எஸ்எஸ்பி இ.எம்.எம்.எஸ். தெகிதெனிய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் தற்போதைய குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்எஸ்பி கே.ஜி.ஏ.கே. பியசேகர களுத்துறை காவல்துறை பிரிவிற்கு தலைமை தாங்குவதற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.