;
Athirady Tamil News

மத்திய வங்கி பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு! நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை

0

மத்திய வங்கியின் பணியாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் கோப் குழுவின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

மத்திய வங்கியின் நிர்வாகம் தன்னிச்சையான தீர்மானத்தின் பிரகாரம் அதன் பணியாளர்களின் சம்பளத்தை 70 வீதத்தினால் அதிகரித்துக் கொண்டுள்ளது.

கோப் குழு பரிந்துரைகள்
இது தொடர்பில் மத்திய வங்கியின் முக்கிய அதிகாரிகள் அண்மையில் நாடாளுமன்றத்துக்கு அழைக்கப்பட்டு, விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் கோப் குழு வழங்கியுள்ள பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.