;
Athirady Tamil News

மொட்டுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் தொடர்பில் வெளியான தகவல்

0

மொட்டுக் கட்சியின் கட்சியின் அதிபர் வேட்பாளர் இந்த வாரம் பெயரிடப்படுவார் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோகித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, தம்பிக்க பெரேரா ஆகிய நால்வரில் ஒருவரே அந்த வேட்பாளராக இருப்பார் என்றும் ஊடகங்களிடம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், “ எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோப் குழுவில் இருந்து விலகுவதால் அக்குழுவின் தலைமைப் பதவியை நான் துறக்கப்போவதில்லை.

பதவி விலகத் தாயார்
அதிபர் ரணில் விக்ரமசிங்க அல்லது ஆளுங்கட்சி கோரிக்கை விடுத்தால் பதவி விலகத் தயாராக இருக்கிறேன்.

தனக்கு எதிராகத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு இருக்கின்றது என உறுதிப்படுத்தப்பட்டால் கோப் குழுவின் தலைவர் பதவியை அல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைக்கூடத் துறப்பதற்குத் தயார்“ என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.