;
Athirady Tamil News

இலங்கையின் இளநீர் ஏற்றுமதி: மில்லியன்களில் ஈட்டப்பட்ட வருவாய்

0

இலங்கையில் 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் தென்னை ஏற்றுமதி மூலம் 3,439 மில்லியன் ரூபா வருவாய் கிடைக்கப்பெற்றுள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரியில் தென்னை ஏற்றுமதி மூலம் 2,705 மில்லியன் ரூபா வருவாய் கிடைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, இந்த வருடம் முதல் இரண்டு மாதங்களில் ஈட்டப்பட்ட வருமானம் 734 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரொஷான் பெரேரா தெரிவித்துள்ளார்.

அதிக கேள்வி
மேலும், மத்திய கிழக்கு நாடுகளில் இலங்கையின் இளநீருக்கு அதிக கேள்வி காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.