;
Athirady Tamil News

உக்ரைனில் ரஷ்யா விரைவில் குறிவைக்கப்போகும் முக்கிய இடம் : புடினின் அறிவிப்பால் கலக்கம்

0

உக்ரைனுக்கு எப்.16 ஜெட் விமானங்கள் வந்தவுடன் அவற்றுக்கு இடமளிக்கக் கூடிய சில பகுதிகளை ரஷ்யா குறிவைக்கும் என அதிபர் புடின் தெரிவித்துள்ளமை பெரும் அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

டோர்ஷோக் நகரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட அதிபர் புடின் இராணுவ வீரர்களை சந்தித்து உரையாடும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தனதுரையில் மேலும் தெரிவிக்கையில்,

எப் 16 விமானங்களை வாங்க
உக்ரைன் தனது மேற்கத்தைய நாடுகளிடம் இருந்து ரஷ்யா மீது இராணுவ அழுத்தத்தை அதிகரிக்கும் எப்-16 விமானங்களின் விநியோகத்திற்காக காத்திருக்கிறது.

உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி, கடந்த ஆண்டு 42 எப்-16 விமானங்கள் உறுதி செய்யப்பட்டதாகக் கூறினார்.

போர் விமானங்களை எப்படி ஓட்டுவது என்பது குறித்து உக்ரைன் விமானிகள் பல மாதங்களாக மேற்கு நாடுகளில் பயிற்சி பெற்று வருகின்றனர்.

ரஷ்யா விரைவில் குறிவைக்கும்
எப்-16 விமானங்கள் தரையில் இருக்கும் போது குண்டுவீச்சு தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க உயர்தர ஓடுபாதைகள் மற்றும் வலுவூட்டப்பட்ட ஹேங்கர்கள் தேவை.

எத்தனை உக்ரைனிய விமானத் தளங்கள் அந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை, மேலும் ஜெட் விமானங்கள் வந்தவுடன் அவர்களுக்கு இடமளிக்கக் கூடிய சிலவற்றை ரஷ்யா விரைவில் குறிவைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.