;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் சினிமா பாணியில் இடம்பெற்ற சம்பவம்… இளைஞர்களின் துணிகரச் செயல்!

0

யாழ்ப்பாண பகுதியொன்றில் பெண்ணின் தங்க நகையை பறித்து சென்ற கொள்ளையர்களை துரத்திச் சென்று பிடித்த இளைஞர்களின் துணிகரச் செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

யாழ். முகமாலை பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு வழிபாட்டுக்கு சென்ற பெண்ணின் தங்க ஆபரணங்களே இவ்வாறு திருடர்களால் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நேற்றிரவு 10.00 மணியளவில் முகமாலையில் வழிபாட்டுக்காக ஆலயத்திற்கு சென்ற பெண்ணின் தாலியினை அறுத்துக்கொண்டு இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிழில் தப்பியோடியுள்ளனர்.

இதனை அவதானித்த முகமாலை பகுதி இளைஞர்கள் பொலிசார் மற்றும் இராணுவத்தினருக்கு தகவல் வழங்கியதுடன், திருடர்களை பின் தொடர்ந்து சென்றுள்ளனர்.

பளை பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் துரிதமாக செயற்பட்டு ஆனையிறவு பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளுடன் திருடர்களை பிடித்ததுடன், அவர்களிடமிருந்து நகையினையும் மீட்டுள்ளார்கள்.

இளைஞர்களால் துரத்திச் செல்லப்பட்டதால் A9 வீதியை விட்டு உள் வீதியால் அவர்களால் தப்பிக்க முடியாது போயுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், குற்ற செயலை தடுக்க உதவிய இளைஞர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.