;
Athirady Tamil News

மதுபான விருந்து செய்த பாடசாலை மாணவர்கள் – பொலிஸார் வெளியிட்ட தகவல்

0

கைவிடப்பட்ட கட்டிடமொன்றில் மதுபான விருந்து ஏற்பாடு செய்த பாடசாலை மாணவர்கள் (School students) குழுவொன்றை பொலிஸார் பொறுப்பேற்றுள்ளனர்.

குறித்த மாணவர் குழு கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சுற்றிவளைப்பு வெலிமடை (Welimada) பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்து
கைது நடவக்கை தொடர்பில் மேலும் தெரிய வருகையில், அதிக விலைக்கு விற்கப்படும் மதுபானத்தை இந்த பாடசாலை மாணவர்கள் அப்போது அருந்திக் கொண்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலதிக விசாரணையின் போது, பயிற்சி வகுப்புகளுக்கு செல்வதாக கூறிவிட்டு ​​இந்த கைவிடப்பட்ட கட்டிடத்தில் மது விருந்துக்கு ஏற்பாடு செய்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, விருந்து வைத்து கொண்டிருந்த 05 பாடசாலை மாணவர்களும், 2 மாணவிகளையும் பொலிஸார் பொறுப்பேற்றனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.