;
Athirady Tamil News

விமான நிலையத்தில் பெண்ணொருவர் அதிரடி கைது! சிக்கிய மர்ம வண்டுகள்

0

சீனாவில் உள்ள பையூன் விமான நிலையத்தில் பெண்ணொருவரை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

இது குறித்து தெரியவருவதாவது,

விமான நிலையத்தில் குறித்த பெண் பயணியின் பெட்டியை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில், பிளாஸ்டிக் தாள்களும், சந்தேகத்திற்கிடமான பொருட்களும் கண்டறியப்பட்டன.

அதில், உயர் கசாஸ் வண்டு, ஆரஞ்சு முதுகு வண்டு, அட்லஸ் வண்டு உள்பட 11 வகையான வண்டுகள் அடையாளம் காணப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வண்டுகள் அனைத்தும் சீனாவில் பூர்வீக வாழ்விடம் இல்லாத அன்னிய இனங்களாக கருதப்படுகின்றன.

உரிய அனுமதியின்றி உயிருள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களை நாட்டுக்கு கொண்டு வருவது சட்ட விரோதமானது என கூறி அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசு பொருளாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.