;
Athirady Tamil News

நுவரெலியா – வலப்பனையில் வீடுடைத்து நகை, பணம் கொள்ளை

0

நுவரெலியா (Nuwara Eliya) – வலப்பனை மா ஊவாவில் உள்ள வீடொன்றில் கடந்த ஒன்றரை பவுன் நகைகளும் 80 ஆயிரம் ரூபாய் பணமும் திருடப்பட்டுள்ளதாக வலப்பனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குடியிருப்பாளர்கள் வெளியில் சென்றிருந்த வேளை குறித்த வீட்டில் திருட்டுச்சமபவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், வீட்டில் உள்ளவர்கள் வெளியில் சென்று திரும்பியதும் ஜன்னல் உடைக்கப்பட்டிருந்ததை அவதானித்துள்ளனர்.

மேலதிக விசாரணை
இதன் பின்னர் வீட்டில் உள்ளே சென்று பார்த்த போது 80 ஆயிரம் ரூபா பணமும், ஒன்றரைப் பவுண் நகையும் திருடப்பட்டமை தெரியவந்துள்ளது.

குறித்த வீட்டில் உள்ளவர்கள் தையல் தொழிலில் ஈடுபடுபவர்கள் எனவும் இதன் மூலம் சேர்த்து வைத்த பணமே திருடப்பட்டுள்ளது என்றும் வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பில் நுவரெலியா சொக்கோ (SOCO) பிரிவு பொலிஸாரோடு வலப்பனை பொலிஸாரும் இணைந்து மேலதிக விசாரணைகளில் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.