;
Athirady Tamil News

காசல் மருத்துவமனையில் பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம்

0

குழந்தை பிறக்கும் போது பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்கும் புதிய திட்டம் மருத்துவமனையில் செயற்படுத்தப்பட்டுள்ளதாக காசல் மகளிர் மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தண்டநாராயணா தெரிவித்துள்ளார்.

பிரசவ அறையில் தந்தையை அனுமதிக்கும் திட்டத்தை செயற்படுத்தும் முதல் அரச மருத்துவமனை காசல் மகளிர் மருத்துவமனையே என இதன்போது குறிப்பிட்டார்.

பெற்றோர் -குழந்தை இடையிலான உறவு
மகப்பேறு அறையில் ஒவ்வொரு தாய்க்கும் தனித்தனி அறைகள் தயார் செய்யப்பட்டுள்ளதுடன், பிரசவத்தின்போது கணவனுடன் தங்கிச் செல்லும் திட்டத்தின் மூலம் தாயால் குழந்தையை நல்ல மனநிலையில் பிரசவிக்க முடியும் எனத் தெரியவந்துள்ளதாக மருத்துவமனைப் பணிப்பாளர் கூறினார்.

இந்தத் திட்டம் தாயின் வலியை இருவருக்குள்ளும் பகிர்ந்து கொள்ள உதவும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை கணவன்-மனைவி இடையேயான உறவும், பெற்றோர் -குழந்தை இடையிலான உறவும் வலுவடையும் என்றும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.