;
Athirady Tamil News

பூநகரியில் 10 கிலோ வெடிமருந்துடன் ஒருவர் கைது

0

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் 10 கிலோ சி – 4 வெடி மருந்துடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூநகரி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் ஆபத்தான வெடிமருந்தை , மோட்டர் சைக்கிளில் கடத்தி செல்வதாக பூநகரி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் பொலிஸார் விசேட நடவடிக்கையை மேற்கொண்டு , மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரை மடக்கி பிடித்தனர்.

குறித்த நபரிடம் இருந்து 10 கிலோ நிறையுடைய சி – 4 ரக வெடிமருந்தை மீட்டனர். அதனை அடுத்து நபரை கைது செய்து பூநகரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.