;
Athirady Tamil News

இளவரசர் ஹரியின் கன்னித்தன்மையை பறித்தது யார்? நடிகை எலிசபெத் ஹர்லி கொடுத்த விளக்கம்!

0

ளவரசர் ஹரியின் கன்னித்தன்மையை நடிகையான எலிசபெத் ஹர்லி பறித்ததாக பரவி வந்த வதந்தியை அவர் முற்றிலும் மறுத்துள்ளார்.

இளவரசர் ஹரியின் தெளிவற்ற விளக்கம்(Prince Harry’s Unclear Statement)
இளவரசர் ஹாரி தனது சுயசரிதையான “ஸ்பெர்” (Spare) புத்தகத்தில் தனது இளவயது காதல் அனுபவத்தை பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அதில், குளோசெஸ்டர்ஷைர்(Gloucestershire) கிராமப்புறத்தில் ஒரு மூத்த பெண்ணுடன் அவருக்கு ஏற்பட்ட சந்திப்பு மற்றும் உறவு குறித்து அவர் விவரித்திருந்தார். ஆனால், அந்த பெண்ணின் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

இதனைத் தொடர்ந்து, அந்த பெண் பிரபல ஆங்கிலேய நடிகையான எலிசபெத் ஹர்லி(Elizabeth Hurley, 58) தான் என்று ராயல் பார்வையாளர்கள்(Royal watchers) மற்றும் சமூக வலைதள பயனர்கள் மத்தியில் வதந்திகள் பரவின.

வதந்தியை மறுத்த எலிசபெத் ஹர்லி(Elizabeth Hurley Denies Rumor)
இந்நிலையில் பிரித்தானிய இளவரசர் ஹரியின்(Prince Harry) கன்னித்தன்மையை பறித்த பெண் நான் தான் என்ற வதந்தியை பிரபல நடிகை எலிசபெத் ஹர்லி(Elizabeth Hurley) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“Watch What Happens Live. என்ற ஆண்டி கோஹனின்(Andy Cohen)” நிகழ்ச்சியில் கடந்த வாரம் கலந்து கொண்ட எலிசபெத் ஹர்லி, “அது முற்றிலும் முட்டாள்தனமானது!” என்று கூறினார்.

மேலும், இளவரசர் ஹாரியை(UK Prince Harry) தான் இதுவரை சந்தித்ததில்லை என்றும் தெளிவுபடுத்தினார்.

தனது வயது மற்றும் தேசியம் போன்ற விவரங்கள் ஆகியவை வதந்திகளுக்கு எப்படி உறுதுணையாக அமைந்தன என்பதையும் எலிசபெத் ஹர்லி விளக்கினார்.

இளவரசர் ஹரி அதில் “அவள் ஆங்கிலேயர், தன்னை விட வயதானவர், குளோசெஸ்டர்ஷைர் இருந்தவர் என்று குறிப்பிட்டிருந்தார்,” என்று அப்போது ஹர்லி நினைவு கூர்ந்தார்.

மேலும் “ மக்கள் உடனே, அது நிச்சயமாக எலிசபெத் தான் இருக்கும்!’ என்றார்கள்.” என்றும் எலிசபெத் ஹர்லி தெரிவித்துள்ளார்.

ஆனால், அவை முற்றிலும் அபத்தமானது என்று கூறி எலிசபெத் ஹர்லி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இந்த வதந்தி ஏன் பரவியது? (How The Rumors Began?)
இளவரசர் ஹரியின் சுயசரிதையில் இருக்கும் தெளிவற்ற தன்மையே இந்த வதந்தி பரவ காரணமாக இருந்தது.

புத்தகத்தில் பெண்ணின் பெயர் அல்லது விவரங்கள் எதையும் ஹரி வெளிப்படுத்தவில்லை. இதனால், யார் அந்த பெண் என்று ரசிகர்கள் யூகிக்கத் தூண்டப்பட்டனர்.

ஹரி குறிப்பிட்ட விவரிப்புகள் எலிசபெத் ஹர்லியுடன் பொருந்தியது மேலும் யூகங்களை வலுப்படுத்தியது. எலிசபெத் ஹர்லி வதந்திகளை மறுத்திருந்தாலும், யார் அந்த பெண் என்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

இளவரசர் ஹாரி சுயசரிதையான “ஸ்பெர்” (Spare) புத்தகம் வெளியான சிறிது நேரத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு தாயான 40 வயது சாஷா வால்போல்(Sasha Walpole) என்ற பெண், நான் தான் இளவரசர் ஹரியின் கன்னித்தன்மை எடுத்த பெண் என்று சன் பத்திரிகைக்கு பேட்டியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.